Published : 02 Aug 2016 07:25 AM
Last Updated : 02 Aug 2016 07:25 AM

டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

சென்னை ராஜா அண்ணா மலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

3,000 மாணவிகள்

தமிழர்களின் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் 3,000-க் கும் மேற்பட்ட மாணவிகள் பாவாடை தாவணி, சேலை அணிந்து வந்திருந்தனர். மேலும், ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றுப்படுகையில் கொண்டாடப்படும் பூஜை வழிபாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்காக அமைக்கப்பட்ட சிறு குளத் தில் மாணவிகள் வாழை மட்டையில் வைத்து அகல் விளக்குகளை மிதக்கவிட்டனர். இதுதவிர, வளையல் கடை, மாணவிகள் தயாரித்த கைவினைப் பொருள்கள் கடை உள்ளிட்டவை அடங்கிய கிராமத்து திருவிழா கடைகளும் அமைக் கப்பட்டிருந்தன.

விழாவின் ஒரு பகுதியாக மாணவிகளின் தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்கள் பார்வையாளர்களின் கண்ணைக் கவருவதாக இருந்தன.

பாரம்பரிய முறைப்படி

இது குறித்து கல்லூரியின் டீன் (மாணவர் விவகாரங்கள்) டாக்டர் அபிதா சபாபதி கூறும்போது, “ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவை பாரம்பரிய முறைப்படி சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதன்மூலம் இயந்திரமயமாகிவிட்ட வாழ்க் கையில் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x