Published : 23 Jan 2017 10:41 AM
Last Updated : 23 Jan 2017 10:41 AM

போராட்டம் காரணமாக 3-வது நாளாக விரைவு ரயில் சேவை பாதிப்பு

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நேற்று 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 3-வது நாளாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட் டங்கள் நடந்து வருகின்றன. இதற் கிடையே, பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மதுரையில் ரயில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் சேது, அனந்தபுரி, பொதிகை, பாண்டியன் உட்பட 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 3-வது நாளாக ரயில்சேவை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில் நிலையங்கள், ரயில்பாதைகளில் ஜல்லிக்கட்டு போராட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென்மாவட் டங்களுக்கும், பிற மாநிலங் களுக்கும் செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையில் தொடர்ந்து மறியல் போராட்டம் நடப்பதால், தென் மாவட்டங்களுக்கான ரயில் போக்கு வரத்து முடங்கியுள்ளது. இருப்பி னும், மாற்றுப்பாதையில் சில விரைவு ரயில்களை இயக்கி வருகி றோம். போராட்டங்கள் முடிவுக்கு வந்தால் மட்டுமே விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x