Published : 18 Oct 2013 09:23 AM
Last Updated : 18 Oct 2013 09:23 AM

யாருடனும் கூட்டணி இல்லை: ராமதாஸ் முடிவு

நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் குருவை, புழல் மத்திய சிறையில் சந்தித்தபின் ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது:

"சிறையில் அடைக்கப்பட்டுள்ள காடுவெட்டி குருவை சந்தித்து நலம் விசாரித்தேன். அவரும் என்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் விடுதலையாகி வெளியே வருவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக, தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி இல்லை" என்றார்.

ராமதாஸ் வரும் தகவல் அறிந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறை முன்பு திரண்டனர். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x