

சீர்மரபினர் பழங்குடியினர் என்பதை சீர்மரபினர் என மாற்றி 1979- ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீர்மரபினர் சங்கத் தலைவர் எம்.ஜெபமணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: சீர்மர பினர் பிரிவில் 68 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 1979-ம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்மர பினர் சமூகத்தினர், ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என அழைக்கப் பட்டனர். இதனால் பழங்குடி யினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங் கப்படுவதைப்போல, சீர் மரபி னர் சமூக மாணவ, மாணவிக ளுக்கும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சீர்மரபினர் பழங்குடியினர் என்பதை சீர் ம ரபினர் என மாற்றம் செய்து 30.7.1979-ல் தமிழக அரசு உத்தர விட்டது. இதனால் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கு வழங் கப்படும் கல்வி உதவித் தொகை சீரமரபினர் சமூக மாணவ, மாணவிகளுக்கு நிறுத்தப்பட்டது.
பிற மாநிலங்களில் இப்போ தும் சீர்மரபினர் பழங்குடியி னர் என்றே அழைக்கப்படு கின்றனர். இதனால் தமிழக அரசு 30.7.1979-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்ததைப்போல் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை ஆணையருக்கு மனு அனுப்பினேன். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து துறை செயலரிடம் மேல் முறையீடு செய்தேன். அதன் மீதும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனது மேல்முறையீட்டு மனுவை விரைவில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.ஓ. தேவன்குமார், எம்.திருநாவுக் கரசு ஆகியோர் வாதிட்டனர். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதா ரரின் மேல்முறையீட்டு மனுவை தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை செயலர் ஒரு வாரத்தில் விசார ணைக்கு எடுத்து 6 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் தரப்பில் தேவையான ஆவணங்களை வழங்க வேண் டும்” என தெரிவித்துள்ளார்.