Published : 08 Aug 2016 10:27 AM
Last Updated : 08 Aug 2016 10:27 AM

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை போலீஸார் நடவடிக்கை

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் பேரில், சேத்துப்பட்டை சேர்ந்த சிவராஜ்(35), ஏகாம்பரம்(40), ஜோசப் சித்தார் சிங்(26), ஜெயச் சந்திரன்(42), புருஷோத்தமன்(25), அருணகிரி(25), செந்தில் குமார்(31) ஆகிய 7 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சென்னை காவல் ஆணையாளர் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புக் காவலில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x