கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் படகுகளிலிருந்து மீன்கள், மீன்பிடி சாதனங்களை எடுத்துச் சென்றதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனவர்கள் மாயம்:

இதற்கிடையில், தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் காணாமல் போயினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, தனுஷ்கோடி அருகே ஒரு படகு பழுதானது. மற்றொரு படகு மூலம் பழுதான படகை இழுத்து வரும் போது, பழுதான படகு கடலில் மூழ்கியது.

இதில் படகில் இருந்து மீனவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை கடலோரக் காவல்படையினர் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in