பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் பெற அவகாசம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் பெற அவகாசம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு
Updated on
1 min read

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாக அரசு தேர்வுத் துறை அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வரும் மார்ச் மாதம் நடைபெற வுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஜனவரி 25 முதல் 29 வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள லாம் என்று முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள பிப்ரவரி 28-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.

அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் ‘ஹால்டிக் கெட் டவுன்லோடு’ என ஆங்கிலத் தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்து விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியைக் பதிவுசெய்து ஹால்டிக்கெட்ட பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in