Published : 30 Jun 2016 08:41 AM
Last Updated : 30 Jun 2016 08:41 AM

இளங்கோவனுக்கு ஆதரவாக காங். மேலிட தலைவரிடம் மாவட்டத் தலைவர்கள் மனு

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக 30-க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், கட்சி யின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து மனு அளித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல் விக்கு பொறுப்பேற்று தமிழக காங் கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜி னாமா செய்தார். காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி, துணைத் தலை வர் ராகுல் காந்தி ஆகியோரின் உத்தரவின்படியே அவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 30-க்கும் அதிகமானோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளிக்க முயன்ற னர். அதற்கு அனுமதி கிடைக்காத தால் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப் பாளருமான முகுல் வாஸ்னிக்கை சந்தித்து மனு அளித்தனர்.

‘இளங்கோவனின் செயல்பாடு களால்தான் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தது. இல்லையெ னில் 2014 மக்களவைத் தேர்தலைப் போல காங்கிரஸ் தனித்து விடப் பட்டிருக்கும். சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸின் தோல்விக்கு ஆளுங்கட்சியின் பணபலமே கார ணம்’ என மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள தால் மாநிலத் தலைவர் பதவியை கைப் பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x