Published : 21 Jul 2016 08:23 AM
Last Updated : 21 Jul 2016 08:23 AM

மின்சார ரயிலில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது

ஆவடி அருகே மின்சார ரயிலில் 11 மாணவர்கள் உட்பட 13 பேர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக 10 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையிலிருந்து அரக் கோணம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், சென்னை அண்ணாசதுக்கத்திலும், அமைந்தகரையிலும் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் பயணித்தனர்.

ஆவடி அருகே நெமிலிச்சேரிக்கு வந்தபோது, ரயிலில் ஏறிய முகமூடி அணிந்த மர்ம இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த கத்திகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளால் சில மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பியோடினர்.

இதில், அண்ணாசதுக்கத் தில் உள்ள அரசு கல்லூரியில் பயிலும் 10 மாணவர்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்ட 13 பேரில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும் பினர்.

சிலர், திருநின்றவூர் தனியார் மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய திருவள்ளூர் ரயில்வே போலீஸார், சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் 10 மாணவர்களை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ‘சென்னை அரக்கோணம் மார்க் கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் பயணிப்பது தொடர்பாக, இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக’ தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x