Published : 07 Mar 2017 08:05 AM
Last Updated : 07 Mar 2017 08:05 AM

எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையா?- அரசு கொறடாவுடன் தினகரன் ஆலோசனை

அதிமுக துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரனுடன் அரசு கொறடா ராஜேந்திரன் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அனைத்து அதிமுக எம்எல்ஏக் களும் பங்கேற்று அரசுக்கு ஆதர வாக வாக்களிக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட் டோருக்கும் அனுப்பப்பட்டது.

ஆனால், வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் எதிராக வாக் களித்தனர். கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண் குமார் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. எனினும் அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் பழனிசாமி அமைச்சரவை வெற்றி பெற்றது.

பேரவை விதிகள்படி, உறுப் பினர்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால், அதுபற்றி பேரவைத் தலைவரிடம் தெரிவித்து அந்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம். பேரவை நிகழ்ச்சி முடிந்து 15 நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அருண்குமார் மீதும் எந்த நடவடிக்கையும் அதிமுக தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அரசு கொறடா ராஜேந்திரன் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசுக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப் படுகிறது.

மேலும், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக திமுகவும் ஓபிஎஸ் தரப்பும் தெரி வித்துள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்தும் தினகரனுடன் ராஜேந்திரன் ஆலோ சித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x