சூடாமணியின் சிறுகதை தொகுப்பு நாளை வெளியீடு

சூடாமணியின் சிறுகதை தொகுப்பு நாளை வெளியீடு
Updated on
1 min read

சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில் பிரபல தமிழ் எழுத்தாளர் சூடாமணியின் 2-வது சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகாடெமியில் 3-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

சூடாமணியின் 60 சிறுகதைகள் அடங்கிய, ‘இன்னொரு முறை’ என்ற 2-வது சிறுகதைத் தொகுப்பு கவிதா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் இந்நூலை வெளியிடுகிறார்.

சூடாமணி 600-க்கும் மேற்பட்ட சிறுகதை களை எழுதியுள்ளார். அவரது சிறுகதை களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 7 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நாடகமாக உருவாக்கப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழாவை ஒட்டி அந்த நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. மெட்ராஸ் பிளேயர்ஸ் என்னும் அமைப்பு உருவாக்கியுள்ள இந்த நாடகத்தைக் காண அனுமதி இலவசம்.

சூடாமணி நினைவு அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in