மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு
Updated on
1 min read

மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு 3-ம் ஆண்டு மாணவரான, சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் என்பவர் 13.3.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

உயிரிழந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அவருடைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in