சென்னையில் இரவு நேர மாநகர பேருந்துகளின் சேவையை அதிகரிக்க கோரிக்கை

சென்னையில் இரவு நேர மாநகர பேருந்துகளின் சேவையை அதிகரிக்க கோரிக்கை
Updated on
1 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து இரவு நேர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் வாசகர் சந்திரன் கூறியிருப்பதாவது:

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு பணி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இரவு நேரத்தில் போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் இரவுப் பணி முடிந்த பிறகு, வீட்டுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் வேறுவழியில்லாமல் அதிகக் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள் ளது.

எனவே போதிய அளவுக்கு கிண்டி பகுதியில் இரவு நேரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது,

‘‘தேவையின் அடிப்படையில் இரவு நேர மாநகர பேருந்துகளை அதிகரித்து இயக்கி வருகிறோம். கிண்டி போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இரவு பேருந்துகள் செல்கின்றன. இருப்பினும், பயணிகளின் புகார் குறித்து ஆய்வு செய்ய, சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு உத்தரவிடப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in