Published : 30 Mar 2014 12:55 PM
Last Updated : 30 Mar 2014 12:55 PM

இடதுசாரி வேட்பாளர்களுக்கு டெபாசிட் செலுத்தும் ஓய்வூதியர்கள்

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உள்பட தமிழகம் முழுவதும் 18 தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை தலா ரூ.25 ஆயிரத்தை, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த 21-ம் தேதி சென்னையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தை காப்பாற்றி வருவதாலும், ஊதிய மாற்ற விகிதத்தில் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பணப் பயன்கள் கிடைக்கச் செய்ததாலும், இந்த பங்களிப்பை மேற்கொள்வதாக அமைப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கோவையில் சிஐடியு தொழிலாளர்கள் நிதி வசூல் செய்து, தொழிலாளர்களை ஒன்றிணைக்கவும், ஏஐடியுசி அமைப்பினர் தொழிற்சாலைகள் முன்பு, மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கவும் முடிவு செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x