Published : 21 Jan 2014 08:09 AM
Last Updated : 21 Jan 2014 08:09 AM

மேடையில் ஆவேசம் எம்.எல்.ஏ.வின் கட்சிப் பதவி பறிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்றார்.

விழா மேடையில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன், அதிகாரிகள் பற்றி அமைச்சரிடம் ஆவேசமாக பேசினார். வேண்டுமென்றே அதிகாரிகள் தன்னை ஒதுக்குவதாக கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து மாதேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா, திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x