

பாப்பாநாடு அருகே திப்பியக் குடியைச் சேர்ந்தவர் ராஜப் பன்(69). காது, மூக்கு, தொண்டை மருத்துவரான இவர் ஒரத்த நாட்டில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி மணிமாலா, மகள்கள் தீபிகா, அம்பிகா, மகன் கோகுல் ஆகியோர் சென்னை யில் வசித்து வருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி இரவு ஒரத்தநாட்டில் மர்ம நபர்களால் ராஜப்பன் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சென்னையில் வசிக்கும் ராஜப்பனின் மகள் தீபிகாவிடம் சந்தேகத்தின் அடிப் படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.