Published : 25 Apr 2017 10:27 AM
Last Updated : 25 Apr 2017 10:27 AM

சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் மறியலும்

சென்னை எழும்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், திராவிட கழக தலைவர் வீரமணி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக, இடதுசாரி கட்சி தலவைர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்கெட் சாலையிலிருந்து பேரணியாக நடந்து வந்த எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x