Published : 14 Jun 2016 08:34 AM
Last Updated : 14 Jun 2016 08:34 AM

காவலர் பணியிடத்துக்கு ஜூன் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் 4 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பாக, ஆதிதிராவிடருக்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘43/390, அன்னை இந்திரா காந்தி சாலை (ஆயில் மில் அருகில்), திருவள்ளூர்’ என்ற முகவரியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாள் தோறும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044-27663843 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x