

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கடந்த 5 நாட்களாக தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் முறையான போக்குவரத்து ஒழுங்கால் கடற்கரைக்குச் செல்லும் காமராஜர் சாலையில் நெரிசல்கள் ஏற்படவில்லை.
எப்படி சாத்தியமானது?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களின் வாகனங்களுக்கு மெரினாவில் நிறுத்த அனுமதியில்லை. இதனால் காமராஜர் சாலையின் கிளை சாலைகள், எழிலகம் அருகில் உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து விடுமுறை நாளான இன்று (சனிக்கிழமை) பெரியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.