Published : 24 Jul 2016 09:38 AM
Last Updated : 24 Jul 2016 09:38 AM

தொழிற்கல்வி பிரிவுக்கு கலந்தாய்வு இன்று முடிகிறது: பி.ஆர்க் படிப்புக்கு 26-ம் தேதி தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான தொழிற் கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. பி.ஆர்க் கலந்தாய்வு வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பொறியியல் படிப்புக்கான விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான 2 நாள் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் கலந்து கொண்ட தகுதியான மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இன்றுடன் தொழிற்கல்வி பிரிவு கலந்தாய்வு முடிவடைகிறது. பி.ஆர்க் எனப்படும் கட்டிட கலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x