Published : 26 Jul 2016 08:11 AM
Last Updated : 26 Jul 2016 08:11 AM

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. பிரிவில் நர்சிங், ரேடியாலஜி - இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, ஆப்டோமேட்ரி மற்றும் பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய் குறியியல்), பிஓடி ஆகிய 9 மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.

8,279 விண்ணப்பம் விற்பனை

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்காக 2016-17ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 8,279 விண்ணப்பங்கள் விற்பனையாகின. ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x