Last Updated : 19 Jan, 2017 10:28 AM

 

Published : 19 Jan 2017 10:28 AM
Last Updated : 19 Jan 2017 10:28 AM

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது: விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது என்று இளைஞர்களின் போராட்டம் குறித்து விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலராலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

இப்போராட்டம் குறித்து இந்தியாவின் சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x