தமிழக மீனவர்கள் காவல் ஜனவரி 3 வரை நீட்டிப்பு

தமிழக மீனவர்கள் காவல் ஜனவரி 3 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 34 பேருக்கு மீண்டும் காவலை நீட்டித்து இலங்கை நிதிமன்றம் உத்திரவிட்டது.

கடந்த நவம்பர் 5 அன்று 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மீனவர்களின் வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

பின்னர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரிக்கப்பட்டனர். பின்னர் யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த மீனவர்களை காவலில் வைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 30 பேரின் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்ததை அடுத்து மல்லாகம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் ஐந்தாவது முறையாக காவலை நீட்டித்து ஜனவரி 3 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார்.

முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடுக்கடலில் படகு மூழ்கி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேருக்கும் மல்லாகம் நீதிபதி டிசம்பர் 26 ஆம் தேதி வரையிலும் காவலை நீட்டித்து உத்திரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in