தமிழக மீனவர் சுட்டுக் கொலை எதிரொலி: இலங்கை துணை தூதரகம், நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழக மீனவர் சுட்டுக் கொலை எதிரொலி: இலங்கை துணை தூதரகம், நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் எதிரொலியாக சென்னை யில் உள்ள இலங்கை துணை தூதரகம், தூதரக அதிகாரி வீடு மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை கடல் எல்லை யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப் பாக்கியால் சுட்டனர். இதில், ராமேசு வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இளைஞர் பிரிஜ்ஜோ (21) உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இலங்கைக்கு எதிராக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீனவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக நுண் ணறிவுப் பிரிவு போலீஸார் எச்சரித் தனர். அதைத் தொடர்ந்து தமிழகத் தில் உள்ள இலங்கை தொடர்பான அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் மற்றும் அதன் அருகே உள்ள தூதரக அதிகாரி வீடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம், எழும்பூர் கென்னத் சந்தில் உள்ள மகாபோதி ஆசிரமம் மற்றும் புத்த மடம், எழும்பூர் காஜா மேஜர் சாலையில் உள்ள இலங்கை வங்கி ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தொடர்பான ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in