Published : 13 Feb 2017 04:35 PM
Last Updated : 13 Feb 2017 04:35 PM
மத்திய அரசு தமிழக அரசியலின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து இன்று (திங்கட்கிழமை) மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, "தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அதிமுக எம்எல் ஏக்களும், அக்கட்சியுமே குழப்பத்தை தீர்க்க முடியும்" என்றார்.
வங்க தேச எல்லையில் பிடிக்கப்பட்ட போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, தற்போது ஏதாவது போலி நோட்டுக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதா? இந்த அரசாங்கம் முன்பிருந்த காங்கிரஸ் அரசு போல் கிடையாது. போலி ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். நாங்கள் விரைந்து செயல்படுவதைத்தான் முடிவுகளும் காட்டுகின்றன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT