Published : 29 Oct 2013 02:45 PM
Last Updated : 29 Oct 2013 02:45 PM

சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட்: சபாநாயகர் நடவடிக்கை

திமுக உறுப்பினர்கள் அனைவரையும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பென்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று, அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் முந்தைய ஆட்சி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் கோஷமிட்டனர்.

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் தான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று அவைத்தலைவர் விளக்கமளித்தார். ஆனால் சமாதானம் அடையாத திமுக-வினர், சபாநாயகர் இருக்கை முன் சென்று தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 23- ஆம் தேதி தொடங்கிய நாள் முதல் திமுக-வினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெளியேற்றப்பட்டதால் அவர்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x