Published : 01 Jun 2017 09:40 PM
Last Updated : 01 Jun 2017 09:40 PM
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்துவிட்ட நிலையிலும், தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்ட நிலையிலும், பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழகத்தில் வியாழக்கிழமை அன்று 10 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக கொளுத்தியது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
''அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெயில் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் இல்லை.
வியாழக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி எடுக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அளவின்படி, திருத்தணியில் 106.7, வேலூரில் 105.26, கரூர் பரமத்தியில் 104.36, சென்னையில் 103.64, திருச்சியில் 102.74, மதுரையில் 102.56, புதுச்சேரியில் 101.66, நாகப்பட்டினத்தில் 101.12, கடலூர் மற்றும் காரைக்காலில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT