Published : 05 Mar 2017 09:24 AM
Last Updated : 05 Mar 2017 09:24 AM
ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என அறிவித்த பிறகும் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தொடர்வதற்கு எதிர்க்கட்சி களின் தூண்டுதலே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டையில் நேற்றிரவு நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் மக்களின் பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தனர். எக்காரணத்தை முன்னிட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என அவர்களிடம் உறுதி அளித்தேன்.
அவர்களும் மன நிறைவோடு போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என கூறிவிட்டு சென்றனர். ஆனால், இதனால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக சில எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வாபஸ் பெறவிடாமல் தடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட திமுகவே காரணம். ஆனால், இன்று அவர்களே போராட்டத்தை தூண்டுகின்றனர்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT