Published : 04 Mar 2014 10:31 AM
Last Updated : 04 Mar 2014 10:31 AM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் சென்ற 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தமிழக மீனவர்களும் அவர்களது 8 படகுகளும் நேற்று சிறைபிடிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் குறித்து இலங்கை மீன்வள அமைச்சக செய்தி தொடர்பாளர் நரேந்திர ராஜபக்ச கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட உடன்படிக்கையை இந்திய மீனவர்கள் மீறிவிட்டதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x