Published : 09 Mar 2017 09:30 PM
Last Updated : 09 Mar 2017 09:30 PM
நெடுவாசலில் எரிவாயு திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டம் நடை பெற்றது.
இதில் கோட்டைக்காடு மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நெடுவாச லில் 22-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
நெடுவாசலில் நேற்று நடைபெற்ற போராட் டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மார்ச் 15 அல்லது 16-ம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதுவரை போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியபோது, “மீத்தேன் உள் ளிட்ட மக்களை பாதிக்கும் வகையிலான எந்த திட்டத் தையும் தமிழக அரசு செயல் படுத்தாது” என்றார்.
இந்நிலையில், நேற்று இரவு 8.15 மணிக்கு போராட்டக் குழுவினர் கூடி ஆலோசித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்ததை யடுத்து 22 நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT