Published : 04 Apr 2014 12:27 PM
Last Updated : 04 Apr 2014 12:27 PM

காங். வேட்பாளர்களை ஆதரித்து தங்கபாலு இன்று முதல் பிரச்சாரம்

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு இன்றுமுதல் பிரச்சாரம் செய்கிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பிரச்சாரம் செய்யவுள்ளார். 4-ம் தேதி (இன்று) விழுப்புரம் தொகுதி திண்டிவனம். ஏப்.5: கடலூர் தொகுதி பண்ருட்டி, சிதம்பரம் தொகுதி புவனகிரி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகள். ஏப்.6: தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி தொகுதிகள்.

ஏப்.7: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி. ஏப்.8: விருதுநகர், தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி. ஏப்.10: கோவை, திருப்பூர், நீலகிரி. ஏப்.11: ஈரோடு. ஏப்.12: நாமக்கல். ஏப்.15: சேலம். ஏப்.16: தர்மபுரி. ஏப்.17: கிருஷ்ணகிரி. ஏப்.18: திருவண்ணாமலை. ஏப்.19: வேலூர். ஏப்.20: ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர். ஏப்.21: சேலம். ஏப்.22: சென்னை ஆகிய தொகுதிகளில் தங்கபாலு பிரச்சாரம் செய்வார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x