Published : 27 Jun 2017 09:31 AM
Last Updated : 27 Jun 2017 09:31 AM

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது: ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது. 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை 7 வரை விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஜூலை 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடக்க உள்ளது. இதில் பிளஸ் 2 மதிப் பெண் கணக்கில் எடுத்துக்கொள் ளப்படாது. தமிழகத்தில் அரசு மருத் துவ, பல் மருத்துவக் கல்லூரி களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவ, பல் மருத் துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தமிழக அரசே ஒற்றைச்சாளர முறையில் கலந் தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது.

சிறப்பு இடஒதுக்கீடு

அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் ஒதுக்கப்படு கின்றன.

ஜூலை 8 கடைசி தேதி

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கு கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் வரும் ஜூலை 7 வரை தினமும் (ஞாயிறு உட்பட) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத் துவக் கல்வி இயக்ககம், 162, ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப் பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ ஜூலை 8 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். தரவரி சைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. கலந் தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்குகிறது.

எம்பிபிஎஸ் இடங்கள்

தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத் தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,050 எம்பிபிஎஸ் இடங் களில் அகில இந்திய ஒதுக்கீட் டுக்கு 456 இடங்கள் (15 சதவீதம்) போக, மாநில அரசுக்கு 2,594 இடங்கள் உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 2,203 இடங்கள் (85 சத வீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 391 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகிறது.

10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 783 எம்பிபிஎஸ் இடங் கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 664 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 119 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

பிடிஎஸ் இடங்கள்

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 200 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் (15 சதவீதம்) போக, மாநில அரசுக்கு 170 இடங்கள் உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 144 இடங் கள் (85 சதவீதம்), மத்திய பாடத் திட்டங்களில் படித்தவர்களுக்கு 26 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக் கப்படுகின்றன.

18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 1,020 பிடிஎஸ் இடங் கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 867 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித் தவர்களுக்கு 153 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x