

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் நாளில் 374 பேர் கல்லூரி களில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான (எம்டி, எம்எஸ், டிப்ளமோ) கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நடந்த மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் 10 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றனர்.
இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்கு மாறு அரசு டாக்டர்கள் உட்பட 401 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 379 பேர் மட் டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 374 பேர் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றனர். 5 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 11-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பிறகு பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான (எம்டிஎஸ்) கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜ் கூறுகையில், “பொதுப் பிரிவின ருக்கான முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 401 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 9 மணி, பகல் 11 மணி பிற்பகல் 2 மணி என 3 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. தனியார் கல்லூரிகள் தங்களுடைய இடங்களை ஒப்படைத்துள்ளன. ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அந்த இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப் படும். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த ஒருவாரத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.