

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
பாஜக வேட்பாளர் அறிவிக்கப் பட்டதும், பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் கே.பழனி சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். இதையடுத்து, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று முன்தினம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம், முதல்வர் கே.பழனி சாமி தலைமையில் நேற்றிரவு சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் நிருபர் களிடம் முதல்வர் கே.பழனிசாமி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர் மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை .