Published : 10 Apr 2014 12:35 PM
Last Updated : 10 Apr 2014 12:35 PM

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியீடு

ஊழலுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தேர்தல் அறிக்கையை கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி, மாநில பிரச் சாரக் குழு உறுப்பினர்கள் ராம், ஜெயராம், கொள்கை உரு வாக்கக் குழு தலைவர் ஆஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் வெளியிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூறியதாவது:

ஊழல் செய்ய வழி வகுக்கும் சட்டங்கள் திருத்தப்படும். ‘எனி டைம் வாட்டர்’ திட்டத்தின்கீழ் மக்களுக்கு சுத்தமான குடிநீர், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 2 மாதங்களில் தீர்ப்பு, இயற்கை விவசாயத்துக்கு அதிமுக்கியத்துவம் ஆகிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

டாஸ்மாக் கடைகளில் பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்பனை நேரம் குறைக்கப்படும். படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். மீத்தேன் மற்றும் கெயில் திட்டத்தை கைவிடுவது, அனைத்து ஆட்டோ ஓட்டுநர் களுக்கும் குறைந்த செலவில் காப்புரிமை, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்களும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x