Published : 23 Apr 2017 09:00 AM
Last Updated : 23 Apr 2017 09:00 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்காக வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பினார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் கோடீஸ் வரன்(54). இவர் கடந்த 2010-ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த பேபியம்மாள்(70) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரை 10 பவுன் நகைக்காக கொலை செய்தார். இவரை திருவொற்றி யூர் போலீஸார் கைது செய்திருந் தனர். 2012-ல் பொன்னேரி உதவி நீதிமன்றம் கோட்டீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவருக்கு கண் நோய் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ராயபுரத் தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று மதியம் 12 மணிக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவருடன் மேலும் 19 கைதிகளும் சிகிச்சை பெற வந்தனர். அனைவருக்கும் கைதிகள் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய் யப்பட்டிருந்தது. இந்நிலையில், கோட்டீஸ்வரனை அழைத்து வந்த ஆண் காவலர் ஒருவர் பெண் காவலர் ஒருவரிடம் கோட் டீஸ்வரனை பார்த்துக்கொள் ளும்படி கூறிவிட்டு சென்றார்.

அவரது அருகில் மற்றொரு கைதியும் சிகிச்சைக்காக காத்திருந்தார். இதை தவறுதலாக புரிந்துகொண்ட பெண் போலீஸ், கோட்டீஸ்வரனை கவனிக்காமல் இருந்துள்ளார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அங்கிருந்து நைசாக நழுவி தப்பினார்.

சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்த ஆண் காவலர் கோட்டீஸ்வரன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தேடினர். ஆனாலும், கோட்டீஸ்வரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கோட்டீஸ்வரனை தப்பவிட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் கைதிகள் வார்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x