Published : 11 Jun 2017 11:21 AM
Last Updated : 11 Jun 2017 11:21 AM

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல்: ஆதாரத்துடன் தமிழக அரசு மீது மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார்

இதுகுறித்து அந்த இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அமைப்பது குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதார அமைச்ச கம் 10 கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு பதில் அனுப்பாமல் நீண்ட நாள்களாக தாமதம் செய்து வந்த தமிழக அரசு கடந்த 5.5.2017-ம் தேதி சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மூலமாக, 10 கேள்விகளுக்கு பதில் தயார் செய்து அறிக்கை அனுப்பி உள்ளது. அந்த மதிப்பீட்டு அறிக்கையில் தஞ்சாவூர் செங்கிபட்டியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக் கலாம் என பரிந்துரை செய்துள்ளார். அந்த கடிதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மதிப்பீட்டு பட்டியலில் மதுரையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள உண்மை தகவல் களை மறைத்து அனுப்பியுள்ளார். மாறாக செங்கிபட்டியில் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருப்பதாக தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரியும், தனியார் மருத்துவக் கல்லூரியும் இருப்பதாக அந்த கடிதத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒதுக் கப்பட்ட 198.21 ஏக்கர் நிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பைப்லைன் செல்வதாக குறிப்பிட் டுள்ளார். மாவட்ட நிர்வாகம், பைப் லைன் செல்லும் நிலத்துக்கு பதில் கூடுதலாக அதே பகுதியில் 38 ஏக்கர் நிலத்தை தருவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், தகவலை குறிப்பிடாமல் மறைக் கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தஞ்சாவூர், பெரம்பலூரில் அரசு மருத்துவமனைகள் இல்லை என பொய்யான தகவலை குறிப்பிட்டுள்ளனர். தஞ்சாவூரில் அரசு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. இந்த வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் கட்டப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் மறைக்கப்பட் டுள்ளன. தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள புதுச் சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. சமீபத்தில் காரைக்காலிலும் ஜிப்மர் மருத்துவ மனை தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல் குறிப்பிடாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய இடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் திருப்பரங்குன்றம் ரயில்நிலையமும், திருமங்கலம் ரயில்நிலையமும், 13 கி.மீ., தொலைவில் விமான நிலையமும், ஒட்டிய தொலைவில் நான்கு வழிச்சாலையும் இருக்கிறது. இந்த தகவல்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

மதுரைக்கான சாதகமான தகவல்களை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டு தஞ்சாவூருக்கு சாதகமான தகவல்களை குறிப் பிட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை மதுரைக்கு வழங்காமல் தென் மாவட்ட மக்களை ஏமாற்றி யுள்ளனர். ஒரு அரசே உண்மைக்கு புறம்பான தகவல்களை மறைத்துவிட்டு அரசியல் உள்நோக்கம், லாபத்துக்காக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல நினைப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக அரசு பரிந்துரையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து மத்திய ஆய்க்குழு பரிந்துரையிபடி தகுதி அடிப்படையில் முதல்நிலையில் இருக்கும் மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை ஒதுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தென் மாவட்ட மக்கள், அரசியல் கட்சியினர், தொழில்துறையினரை திரட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். இதற்கு அரசு பணியாவிட்டால் அடுத்தகட்டமாக தோப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x