Published : 17 Jun 2016 08:10 AM
Last Updated : 17 Jun 2016 08:10 AM

திமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: கனிமொழி எம்பி தகவல்

திமுகவினரிடையே எவ்வித கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை என்று அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கூறினார்.

தஞ்சாவூர் செல்லும் வழியில், திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று வந்த அவரிடம், கருணாநிதி - ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, “இது கற்பனையானது. இந்தக் கருத்தில் எந்த உண்மை யும் இல்லை. உடல்நலக் குறை வால்தான், திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அவரால் வர முடியவில்லை. திமுகவினரிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. தமிழக சட்டப்பேர வையில் பொறுப்பான எதிர்க்கட்சி யாக திமுக செயல்படும்” என்றார்.

காவிரி நீரைப் பெற

தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்ற கனிமொழி செய்தியாளர் களிடம் கூறியது: காவிரி டெல்டாவில் 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி யின்போது, அண்டை மாநிலங்களு டன் நல்லுறவைக் கடைபிடித்து, தண்ணீர் பெற்றோம். இதை அதிமுக ஆட்சி செய்யத் தவறியதால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கர்நாட கத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக ஜெயலலிதா கூறியது, வெறும் கண்துடைப்பு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x