Published : 23 Mar 2017 12:22 PM
Last Updated : 23 Mar 2017 12:22 PM

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பேனா, சாக்லெட் வழங்கிய போலீஸார்

ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, பேனா மற்றும் சாக்லெட் வழங்கி, குமரி மாவட்ட போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிமுறைகள் மீறியதாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர். தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே, ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்த போலீஸார், பேனா, சாக்லெட் ஆகியவற்றை வழங்கினர்.

பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. போலீஸாரின் இந்த யுத்தியை பொதுநல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x