Published : 09 Mar 2017 09:41 AM
Last Updated : 09 Mar 2017 09:41 AM

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் பட்டுவாடா புகார்: வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு கெடு- உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேர வைத் தொகுதிகளில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா செய்த தாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறையின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு வார காலஅவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு

பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறி இரண்டு தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், இத்தொகுதிகளில் தேர்தல் நடத்து வதற்காக தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகையை திமுக, அதிமுக வேட்பாளர்களிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி இந்த தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் பாஸ்கரன், குஞ்சிதபாதம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரணையின் போது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஆணை யம் செலவிட்ட தொகை குறித்த விவரத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தார். அதில், அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.94 லட்சத்து 17 ஆயிரமும், தஞ்சை தொகுதியில் 42 லட்சத்து 82 ஆயிரமும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, இரண்டு தொகுதிகளிலும் பணம்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இதையடுத்து, தேர்தல் ஆணை யத்துக்கு காலஅவகாசம் வழங்கிய நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x