Published : 01 Aug 2016 09:47 AM
Last Updated : 01 Aug 2016 09:47 AM
உள்ளகரம் - புழுதிவாக்கம் பகு தியில் குடிநீர் இணைப்பு பெறு வதற்காக 2 நாட்கள் நடைபெற்ற முகாமில் 1,451 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட உள்ளகரம் -புழுதிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ள து. அதனால் அப்பகுதி மக்கள், குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில் மொத்தம் 1,451 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெறப்பட்டவுடன், அவை பரிசீலிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT