Published : 03 Apr 2017 09:27 AM
Last Updated : 03 Apr 2017 09:27 AM

வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலையில் வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக் கப்பட்டார். ‘வழக்கமான மருத்துவ பரி சோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள் ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். எனவே, நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம்’ என தேமுதிக தலைமை கழகம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 11 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற விஜயகாந்த், நேற்று காலையில் வீடு திரும்பினார். இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று (நேற்று) வீடு திரும்பியுள்ளார். அவரை வீட்டில் சந்தித்து பேசினேன். தற்போது நலமாக இருக்கிறார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் ஓய்வு எடுப்பார். பின்னர், ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x