எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
Updated on
1 min read

அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் நவம்பர் 3 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லை னில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒருங்கிணைக் கப்பட்ட அசல் மதிப்பெண் சான் றிதழை நாளை காலை 10 மணி முதல், தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். இதர தேர்வர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தேர்வெழுதிய பாடங் களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in