அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் 27-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் 27-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக டிடிவி தினகரன் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ல் டிடிவி தினகரன் மீது அமலாக்கப் பிரிவினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தினகரன் மீது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஐரோப்பிய நாடு களில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டெண்டி இன்வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்யப்பட்டதாக கூறப் படுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ல் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கையும் பதிவு செய்துள்ளது.

இந்த இரண்டாவது வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி போலீஸார் முன்பு தினகரன் தொடர்ந்து ஆஜராகி வருவதால் அவரால் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை’’ என்று தெரிவித்தனர்.

கண்டிப்பாக ஆஜராக வேண்டும்

‘‘அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா?’’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். ‘‘அது தொடர் பாக எந்த தகவலும் இல்லை’’ என வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து விசா ரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியிருப்பதால் கண்டிப்பாக தினகரன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in