Published : 30 Jan 2016 08:32 AM
Last Updated : 30 Jan 2016 08:32 AM

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ராபின் மெயின் வழக்கில் 32 ஆண்டுக்கு பின் தீர்ப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு சிறை தண்டனை

தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் அவரது நண்பர் ராபின் மெயின் உள்ளிட்ட 32 பேர் மீதான மோசடி வழக்கின் விசா ரணை முடிந்து 32 ஆண்டுகளுக் குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 பேருக்கு சிறை தண் டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி உத்தரவிட்டார்.

1982-ம் ஆண்டில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து (பின்னர் இவர் தமிழக சட்டப்பேரவை சபா நாயகராகவும் இருந்தார்). 1982-83-ம் ஆண்டுகளில் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை துறை நிதியை முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.

காளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில் சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெறுவதற் காக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் 15 லாரி மற்றும் டிராக் டர்கள் வாங்குவதற்கு கடன் பெற்ற தாக குற்றச்சாட்டு எழுந்தது. கடன் பெற்றவர்கள் சிலர் வங்கிகளில் பெற்ற கடனுக்கு உரிய தவணை தொகையை செலுத்தவில்லை. வாகனங்கள் குறித்து வங்கிகள் தரப்பில் விசாரித்தபோது வங்கி களில் சமர்ப்பித்த ஆவணங் களில் உள்ள பதிவு எண் களில் உள்ள வாறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வங்கிகள் சார்பில் சி.பி.ஐ போலீஸாரிடம் புகார் செய்தனர்.

சி.பி.ஐ 1984-ல் வழக்கு பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், இந்திய ஊழல் தடுப் புச் சட்டத்தின் கீழ் ஒரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால் தற் போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் 11 பேரை விடுதலை செய்தும் சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் நீதிபதி கே.வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார்.

சி.பி.ஐ தரப்பில் வழக் கறிஞர்கள் கீதா ராமசேஷன், எம்.வி.தினகர் ஆகியோர் ஆஜ ராகினர்.

ராபின் மெயின் - 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் அபராதம்.

சூரியக் குமார்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

சோமசுந்தரம்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.

சாகுல் அமீது- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம்.

பசில் சாம்- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 3 லட்சம் ரூபாய் அபராதம்.

அபராதத் தொகை ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாயில் 52 லட்சம் ரூபாயை வாகனக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, குற்றவாளிகள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x