Published : 30 Aug 2016 09:29 AM
Last Updated : 30 Aug 2016 09:29 AM

தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் இடை நீக்கம்?

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கு.ஞானதேசி கன் நேற்று இடைநீக்கம் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயல ராக இருந்தவர் கு.ஞானதேசிகன். 2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று, அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில், திடீரென தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஞானதேசிகன் மாற்றப்பட்டார். முதல்வரின் செயல ராக இருந்த பி.ராமமோகன ராவ் புதிய தலைமைச் செயலராக நிய மிக்கப்பட்டார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) தலைவராக ஞானதேசிகன் நியமிக் கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவர் பணி யிடைநீக்கம் செய்யப்பட்டிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டதற் கான காரணங்கள் வெளியாக வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x