Published : 02 Feb 2014 01:19 PM
Last Updated : 02 Feb 2014 01:19 PM

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 4,000 மீனவர்கள் நேற்று இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, 3 படகுகளுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதாக, கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும், படுகாயமடைந்த மீனவர்கள் சேதமடைந்த படகுகளுடன் கரை திரும்பியதாகவும் மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x