Published : 15 Jun 2017 08:56 AM
Last Updated : 15 Jun 2017 08:56 AM

வத்திராயிருப்பு வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு புதிய சாலை வசதி: பேரவையில் கருணாஸ் கோரிக்கை

வத்திராயிருப்பு வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு செல்ல சாலை வசதி செய்துதர வேண்டும் என திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கருணாஸ் பேசியதாவது:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். வடதமிழகத்தில் உள்ளவர்கள் 2 நாள், தென் தமிழகத்தில் உள்ளவர்கள் ஒரு நாள் பயணிக்கின்றனர். அதிலும் 300 முதல் 700 கி.மீ, தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

வில்லிபுத்தூர் வத்திராயிருப்பு மலை யில் வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு 35 கி.மீ. தொலைவில் சென்றுவிட முடியும். இதற்கு ஏதுவாக மத்திய அரசின் அனுமதி பெற்று, வத்திராயிருப்பு வனப் பகுதியில் தமிழக வனத்துறை சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு கருணாஸ் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சபரிமலைக்கு புதிய சாலை அமைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x