Published : 17 Jun 2017 08:38 PM
Last Updated : 17 Jun 2017 08:38 PM
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி, அச்சுறுத்த நினைப்பது கோழைத்தனமானது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி, அச்சுறுத்த நினைப்பது கோழைத்தனமானது. ஜனநாயகத்தில் நாகரீக அரசியலுக்கு இது எதிரானது.
தமிழகத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT