Published : 30 Mar 2017 08:07 PM
Last Updated : 30 Mar 2017 08:07 PM
விவசாயிகளின் துயரங்களைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வறட்சி நிவாரணம் வழங்குதல், விவசாயக் கடன் தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதிநீர் மேலாண்மை கொள்கைகளை வகுத்தல் என அனைத்திலும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
16 நாட்களைத் தாண்டியும் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமரும், மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மற்ற மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் கவனித்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் துயரங்களை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT